89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஆக. 29) மாலை தொடங்குகிறது.

தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கிவைக்கிறார். கொடியேற்றத்தைக்காண சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்டமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மேலும், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4mXYcM1
via IFTTT