89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அதிக பனியால் ஏற்படும் முக வாதத்தை தடுப்பது எப்படி? - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்

அதிக பனியால் ஏற்படும் முக வாதத்தை தடுப்பது எப்படி? - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்

கோவை: கார்த்திகை, மார்கழி பனியில் நடப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அதிக குளிரால் முகவாதம் (பெல்ஸ் பால்சி) ஏற்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க‌ மாநில பொதுச்செயலாளரும், பிசியோதெரபி மருத்துவருமான டாக்டர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது: கார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் முகவாதம் ஏற்படும் என்பது, நாம் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rIFUCpv
via IFTTT