89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வாகனக் கழிவுகளைக் கொண்டு மிகப்பெரிய ருத்ர வீணை உருவாக்கிய ம.பி. கலைஞர்கள்

வாகனக் கழிவுகளைக் கொண்டு மிகப்பெரிய ருத்ர வீணை உருவாக்கிய ம.பி. கலைஞர்கள்

பொருட்களின் மறுபயன்பாடு என்பது தற்போதைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பயன்படுத்த முடியாத பொருட்களை வேறு ஒரு பொருளாக மாற்றி மீண்டும் பயன்படுத்துவதே மறுபயன்பாடு. இந்த வகையில் குப்பை என்று ஒதுக்கிய பொருட்களில் இருந்து கலைப்படைப்புகளை உருவாக்கி வருவது அதிகமாக உள்ளது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் 15 கலைஞர்கள் இணைந்து கழிவு பொருள்களில் இருந்து 28 அடி நீளமும், 10 அடி அகலமும், 12 அடி உயரமும் உடைய மிகப்பெரிய "ருத்ர வீணை"யை உருவாக்கியுள்ளார்கள்.

சுமார் 5 டன் எடை கொண்ட இந்த மிகப்பெரிய ருத்ர வீணையை உருவாக்க 6 மாதங்களாகியிருக்கிறது. இதற்காக, ரூ. 10 லட்சம் செலவாகியிருக்கிறது. இதனை உருவாக்கியவர்கள் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ருத்ர வீணை என்று தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xyH6OvE
via IFTTT