89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு   திருப்பாவை பட்டு  உடுத்தி எழுந்தருளிய ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு   திருப்பாவை பட்டு  உடுத்தி எழுந்தருளிய ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பட்டு உடுத்தி ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் பிறந்த பெருமைக்குரிய தலமாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பானை நோன்பு இருந்து பகவான் கண்ணனை கரம் பிடித்தார் என்பது கோயில் வரலாறு. மார்கழி மாதத்தில் உள்ள 30 நாட்களுக்கு 30 திருப்பாவை பாசுரங்களை ஆண்டாள் பாடியுள்ளார். கோயிலில் மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் தங்கத்தேரில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cy5vcWK
via IFTTT