பெகுசராய்: பிஹார் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பெண் பப்லி குமாரி. 7 மாத குழந்தைக்கு தாயான இவர், பிஹார் மாநில தேர்வாணையம் பிபிஎம்சி நடத்திய தேர்வில் வென்று தற்போது டிஎஸ்பி ஆக உள்ளார்.
பாப்லி குமாரி, கடந்த 2015-ம் ஆண்டு பிஹார் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிக்குச் சேர்ந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வந்த அவருக்கு பெரிய பதவியில் அமர வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. அந்தக் கனவை நனவாக்க முயற்சித்த குமாரி பிஹார் மாநில பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளுக்காக காவல்துறையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்திருக்கிறார். முதல் இரண்டு முறை எழுதிய தேர்வில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது முயற்சியில் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/waDRM8e
via IFTTT