89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்செந்தூர் ஆவணி திருவிழா சுவாமி சிவப்பு சார்த்தி வீதி உலா - ஆக. 26-ம் தேதி தேரோட்டம்

திருச்செந்தூர் ஆவணி திருவிழா சுவாமி சிவப்பு சார்த்தி வீதி உலா - ஆக. 26-ம் தேதி தேரோட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுவாமி சிவப்பு சார்த்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்தி எழுந்தருளினார். அப்போது சுவாமி சிவப்பு வண்ண வஸ்திரம், சிவப்பு வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து எட்டு திருவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XARm03p
via IFTTT