புதுச்சேரி: 20 கிலோ காகிதங்களைக் கொண்டு 4.5 அடியில் ரசாயனமின்றி ஒரு வாரத்தில் புதுச்சேரி அரசு பள்ளிக் குழந்தைகள் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
புதுச்சேரி இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கைவினைப் பொருட்கள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார். இதன் பயனாக பள்ளியில் உள்ள காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பயனற்ற காகிதங்களை குப்பையில் போடாமல் 4.5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவும் இன்றி சிலையை உருவாக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1DLfE9U
via IFTTT