திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், தங்கும் அறைகள் பெறவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும், இலவச அன்னதான கூடத்திலும், சர்வ தரிசன வரிசையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.
மேலும், அலிபிரி வாகன சோதனை சாவடி முதலே பக்தர்கள் வாகனங்களில் நீண்ட வரிசையில் சென்று ரசீது செலுத்தி திருமலைக்கு சென்றனர். இங்கு மிகவும் தாமதம் ஆவதால், நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் உள்ளதை போன்று, பாஸ்டேக் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vlrVPaW
via IFTTT