89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சென்னையில் திருநருக்காக இலவச நடனப் பள்ளி

சென்னையில் திருநருக்காக இலவச நடனப் பள்ளி

கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை கல்வி, மருத்துவச் சேவைகளை அளிப்பதோடு, திருநர் சமூகத்தினருக்காக இரண்டு இடங்களில் நடனப் பள்ளிகளை இலவசமாக நடத்துகிறது. இதன் நிறுவனர் கே.என். ஆனந்தகுமார், திருநங்கைகள் சமூகத்துக்கு உதவிவரும் சகோதரன் தன்னார்வ அமைப்பின் மூலம் சென்னையிலும் இலவச பரதநாட்டியப் பள்ளியை அண்மையில் தொடங்கினார்.


சென்னை, சூளைமேடு பகுதியில் செயல்படவிருக்கும் இந்த பரதநாட்டியப் பள்ளியில் பதினைந்து பேர் நடனம் கற்பதற்காகச் சேர்ந்துள்ளனர். திருநங்கை பொன்னியின் பரதநாட்டியத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. திருநங்கை நாட்டியப் பள்ளியை சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். டாக்டர் நெடுங்காடி ஹரிதாஸ், டாக்டர் சுனில், நடனக் கலைஞர் டாக்டர் காயத்ரி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வால்மீகி முனிவரின் பாடலுக்கு, மிகக் குறுகிய காலத்தில் பயிற்சி எடுத்து மாணவிகள் அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினர். நடனம் பயில்வதற்காகச் சேர்ந்திருக்கும் மூன்று மாணவிகளிடம், “நடனப் பள்ளியில் சேர்வதற்கு என்ன காரணம் என்று கேட்டோம்?”



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hwPQ7SV
via IFTTT