பங்குனி மாதத்தை வழிபாட்டுக்கு உரிய மாதமாகப் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். மழைக்காலமும் குளிர்காலமும் முடிந்து கோடைக் காலம் தொடங்குகிற பங்குனி, விவசாயத்திற்கான மிக முக்கியமான மாதம் என்பார்கள்.
பங்குனி மாதத்தில்தான் ஏராளமான ஆலயங்களில் பிரம்மோத்ஸவ விழா நடைபெறும். பங்குனிப் பெருந்திருவிழா எனும் பெயரில் பத்து நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். காலையும் மாலையும் உத்ஸவ மூர்த்திகள், ஒவ்வொரு விதமான வாகனங்களில் திருவீதியுலா வருவார்கள். திருத்தேரோட்டமும் திருக்கல்யாண வைபவமும் கோலாகலமாக நடந்தேறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QDcS3b
via IFTTT