89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பஞ்சமி... பங்குனி வியாழன்... வளம் தருவாள் வாராஹி

பஞ்சமி... பங்குனி வியாழன்... வளம் தருவாள் வாராஹி

பஞ்சமி திதியும் பங்குனி மாதத்து வியாழக்கிழமையும் இணைந்த நாளில், வாராஹி தேவியை மனதார வழிபடுவோம். வளமும் நலமும் தருவாள் தேவி. மங்கல காரியங்களின் தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் அன்னை. பஞ்சமி திதியில், மாலையில் விளக்கேற்றி ஸ்ரீவாராஹி தேவியின் மூல மந்திரங்களையும் காயத்ரியையும் பாராயணம் செய்து, நம் மனதில் உள்ள குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக்கொண்டால், நம் வேண்டுதல்களையெல்லாம், கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வாள் தேவி.

ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வத்துக்கு உகந்ததாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொரு வழிபாட்டுக்கும் உரியதாக வணங்கப்படுகிறது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. அதேபோல, துவாதசி திதியும் பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தசி திதி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கும் போற்றுவதற்கும் உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QdAknj
via IFTTT