89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கரோனா தடுப்பு நடவடிக்கை; பக்தர்கள் இல்லாமல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கை; பக்தர்கள் இல்லாமல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கோயில் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34GneDm
via IFTTT